Connect with us

VIDEOS

இது உங்களுக்கே ஓவரா தெரியலையா..? புயல் நேரத்திலும் ஷூட்டிங் நடத்திய விஜய் டிவி சீரியல்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் 4 சகோதரிகளை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சந்தானம் என்ற சரவணன் தன்னுடைய குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகிறார்கள். அதில் ஹீரோ நிவின் காவிரியை பார்த்ததும் காதல் வயப்படும் நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஊரை விட்டு காவேரி குடும்பம் கிளம்பி சென்னையில் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர்.

   

இதனிடையே காவிரியின் தங்கையின் நர்மதா சிகிச்சைக்கு பணம்  இல்லாமல் இருக்க வேறு வழியில்லாமல் காவிரி விஜய் இடம் ஒரு வருட காண்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து காவிரிக்கு திருமணம் நடந்ததை அறிந்த நிவின் மனமுடைகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க மகாநதி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரதீபா விலகி தற்போது அவருடைய கதாபாத்திரத்தில் சீரியல் பிரபலம் திவ்யா கணேஷ் நடிக்கிறார்.

சமீபத்தில் சென்னையை புயல் புரட்டி போட்ட நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பெரும் சேதத்தையும் சந்தித்தனர். இப்படியான நேரத்தில் கூட ஷூட்டிங் என்று நடிகை திவ்யா கணேஷ் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து இந்த வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Divya Ganesan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@divya_ganesan_official)

author avatar
Nanthini
Continue Reading

More in VIDEOS

To Top