Connect with us

CINEMA

எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா? கமல் கதையையே கமலிடம் சொல்லி மாட்டிய மிஷ்கின்.

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக தன்னை நிரூபித்தவர் தான் மிஷ்கின். அந்த படம் பெரியளவில் வசூல் செய்யவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன் போன்ற அனைத்து படங்களுமே மாறுபட்ட கதைகளத்துடன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களாக பார்க்கப்பட்டன.

   

தற்போது மிஷ்கின் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த மாவீரன் மற்றும் லியோ ஆகிய படங்களில் மிஷ்கினின் நடிப்பு பாராட்டை பெற்றது. இந்நிலையில் மிஷ்கின் குறித்து செய்தி ஒன்று உலாவி வருகிறது. அதாவது மிஷ்கின் ஒருமுறை நடிகர் கமல்ஹாசனிடம் கதை சொல்ல சென்றாராம். கதை சொல்ல தொடங்கிய உடனேயே இது ஏற்கனவே நான் நடித்த படத்தின் கதை மாதிரியே இருக்கிறதே. அதில் கூட நான் இந்த கேரக்டரில் நடித்திருப்பேன் என கமல் கட்டைய போட்டு விட்டாராம்.

அதற்கு மிஷ்கின் ஏதோ மழுப்பிவிட்டு வேறு கதை உள்ளது என அந்த கதையை கூறியுள்ளார். அதை கேட்ட கமல் அந்த மொழியில் அந்த நடிகர் நடித்த படமாச்சே என விளாவரியாக கூறியுள்ளார். அவ்வளவு தாம் அதன் பின்னர் நான் புதிதாக கதை தயார் செய்து வருகிறேன் என்று சென்ற இயக்குனர் மிஷ்கின் அதன் பிறகு கமலை சந்திக்கவே இல்லையாம்.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top