நம்ம அரசு… நம்ம கையில்.. இனி இ-சேவை மையமே தேவையில்லை..! உங்க செல்போனில் வந்தாச்சு.. தமிழக அரசின் 66 சேவைகள்…!

Spread the love

தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கும், சான்றிதழ்கள் வாங்குவதற்கும் ஆன்லைன் வசதிகளும் இ-சேவை மையங்களும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரும் காலங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதோடு, சான்றிதழ்கள் கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றி, மக்கள் தங்களின் தேவைகளை மிக எளிதாகவும் விரைவாகவும் பெறும் நோக்கில், தமிழ்நாடு அரசு “நம்ம அரசு நம்ம கையில்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், தங்களது மொபைல் போன் வழியாகவே 20 அரசுத் துறைகளைச் சேர்ந்த 66 வகையான சேவைகளைப் பெற முடியும். இதற்காக 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு ‘வணக்கம்’ அல்லது ‘ஹாய்’ (Hi) என்று செய்தி அனுப்பிய பிறகு, தமிழில் சேவைகளைப் பெற ‘T’ என்றும், ஆங்கிலத்தில் பெற ‘E’ என்றும் பதிவிட்டு, தங்களுக்குத் தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதலாக உதவி தேவைப்பட்டால் 18004256000 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வாட்ஸ்அப் வசதியின் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து முக்கிய சான்றிதழ்களையும் எளிதாகப் பெறலாம். இதுமட்டுமன்றி, மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில் வரி செலுத்துதல் மற்றும் தொழில் உரிமம் பெறுதல் போன்ற சேவைகளையும் எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளலாம். பொதுமக்கள் தாங்கள் விண்ணப்பித்துள்ள நிலவரத்தை (Application Status) உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளதால், எந்த இடத்திலிருந்தும் எப்போது வேண்டுமானாலும் மக்கள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Swetha

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

9 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

9 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

10 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

10 மணத்தியாலங்கள் ago