காப்பாத்துங்க.. காப்பாத்துங்க!.. அதிகாலை 3 மணிக்கு கதறல் சத்தம்.. தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றிய 60 வயது முதியவர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி…!!!

Spread the love

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி (40). கணவரை இழந்த இவர், கோபாலபுரத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு சாந்தி, அவரது உறவினர் ஸ்ரீதேவி (45), மற்றும் சாந்தியின் மகன், மகள் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். கோடைகாலம் என்பதால் சாந்தியும் ஸ்ரீதேவியும் வீட்டின் கதவைச் சிறிது திறந்து வைத்துவிட்டு, வாசலுக்கு அருகே படுத்துத் தூங்கியதாகத் தெரிகிறது.

அதிகாலை 3 மணி அளவில் இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவர்கள் மீது திடீரென பெட்ரோலை ஊற்றியுள்ளார். அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் அந்த நபர் தீயை பற்றவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். சாந்தி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவரின் உடலிலும் தீப்பிடித்து மளமளவெனப் பரவியது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சாந்தியின் மகன் சந்தீப்குமார் (16), தீயை அணைத்து இருவரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தான். பலத்த தீக்காயமடைந்த இருவரும் உடனடியாக அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இக்கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியைச் சேர்ந்த முத்து (60) என்பவர்தான் பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் முத்துவைக் கைது செய்து, இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

8 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

8 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

9 மணத்தியாலங்கள் ago