“ஒடிசாவில் பயங்கரம்!… ஆசை ஆசையாய் சாப்பிட்ட தாஹிபரா.. 27 குழந்தைகள் உட்பட 58 பேர் உயிருக்குப் போராட்டம்… உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிர விசாரணை”….!!!

Spread the love

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாபூர் கிராமத்தில், ‘தாஹிபரா’ எனப்படும் உள்ளூர் உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட 58 பேருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் வியாபாரி ஒருவரிடம் விற்கப்பட்ட ‘கட்டாக் தாஹிபரா’ எனும் தயிர் வடை போன்ற உணவை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விரும்பிச் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில நேரத்திலேயே பலருக்கும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தசரத்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஜாஜ்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது வரை 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபரீதச் சம்பவம் குறித்து ஒடிசா மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த மூன்று தனித்தனி குழுக்களை அரசு அமைத்துள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் முகேஷ் மஹாலிங் தெரிவித்துள்ளார். அந்த உணவில் ஏதேனும் நச்சுத்தன்மை கலந்திருந்ததா அல்லது தயாரிப்பு முறையில் குறைபாடு இருந்ததா என்பது குறித்து இந்தக் குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவர்கள் சாப்பிட்ட ‘தஹிபாரா’ உணவே இந்த உடல்நலக்குறைவுக்கு முக்கியக் காரணம் என்று அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே இது திட்டமிட்ட கலப்படமா அல்லது அசுத்தமான தண்ணீரால் ஏற்பட்ட பாதிப்பா என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.

Muthu Mani

Recent Posts

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 minutes ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

6 minutes ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

9 minutes ago

“ஒன்லி 2 சாய்ஸ்” என்ன பாஸ் ஓகேவா..? அமெரிக்காவிற்கு செக் வைத்த ஈரான்… டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…

17 minutes ago

ஒரு வருடம் டேட்டிங்க் திடீர் கர்ப்பம்.. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த மாளவிகா… சினிமாவை விட்டு விலகிய பின்னணி..!!

90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…

20 minutes ago