ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தீவிரமான தாக்குதலால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் காமேனி கொல்லப்பட்டதுடன், 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது.
இந்தப் போரின் ஆரம்பக் கட்டத்திலேயே அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதாரச் சுமையைச் சந்தித்து வருகிறது. போரின் முதல் நாளில் மட்டும் சுமார் 6,900 கோடி ரூபாயை (779 மில்லியன் டாலர்) அமெரிக்கா செலவிட்டுள்ளது. ஒருவேளை இந்தப் போர் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், அமெரிக்காவிற்கு ஒட்டுமொத்தமாக சுமார் 18.87 லட்சம் கோடி ரூபாய் (210 பில்லியன் டாலர்) வரை செலவாகும் என்று ராணுவப் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்கா தனது அதிநவீன மற்றும் மிக விலையுயர்ந்த ஆயுதங்களை இந்தப் போரில் களமிறக்கியுள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு’ (USS Gerald R. Ford) உள்ளிட்ட இரு பெரும் கப்பல்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களை இயக்குவதற்கு மட்டுமே ஒரு நாளைக்குச் சுமார் 58 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதுதவிர வீரர்களின் தேவைகள் மற்றும் ஆயுதங்களைக் குவிப்பதற்கென ஏற்கனவே 5,500 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இருப்பினும், இத்தகைய பொருளாதாரச் செலவுகளைப் பொருட்படுத்தாமல் போரில் பின்வாங்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படை முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரான் இப்போது பேச்சுவார்த்தைக்கு வர விரும்பினாலும் அதற்கான காலம் கடந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார். போர் எவ்வளவு காலம் நீடித்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருப்பது, சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…