உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சூர்ய பிரதாப் சிங் (35) என்ற தனியார் நிறுவனப் பொறியாளர், தனது கள்ளக்காதலி ரத்னா (46) மற்றும் அவரது இரண்டு மகள்களால் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ கிரீன் சிட்டி பகுதியில், சூர்ய பிரதாப் சிங்கும் ரத்னாவும் லிவ்-இன் உறவில் ஒன்றாக வசித்து வந்தனர். ரத்னாவுக்கு 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சூர்ய பிரதாப் சிங்குக்கு ரத்னாவின் மூத்த மகள் மீது ஆசை ஏற்பட்டு, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மகள் தாயிடம் தெரிவித்ததால், ரத்னாவுக்கும் சூர்ய பிரதாப் சிங்குக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு மீண்டும் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த ரத்னா தனது இரு மகள்களுடன் இணைந்து, சூர்ய பிரதாப் சிங்கை கீழே தள்ளி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார்.
சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சூர்ய பிரதாப் சிங் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விசாரணையில், “என் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் கொன்றேன்” என்று ரத்னா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ரத்னா மற்றும் அவரது இரண்டு மகள்களையும் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…