ஒடிசா மாநிலம் காசிபூர் பிளாக் பைகனகுடா என்ற கிராமத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அந்த பெண்ணின் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேறு கிராமத்திற்கு சென்றுள்ளார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் சமூகத்தினர் மற்றும் கிராமத்தினர் இதை அவமானமாக நினைத்து அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 40 பேரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள்.
மேலும் மீண்டும் கிராமத்துக்கே சேர்க்க வேண்டும் என்றால் சுத்திகரிப்பு சடங்கு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து கிராமத்து கோவில் முன்பு கால்நடைகளை பலியிட்டு அந்த குடும்பத்தை சேர்ந்த 40 பேரும் மொட்டை அடிக்கப்பட்டார்கள். அதற்கு பிறகு அந்த குடும்பத்தினர் கிராமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் . அந்த 40 பேர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் வயல்வெளியில் அவர்கள் அமர்ந்திருக்கும் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…