ஆந்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியினுடைய காரில் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கி உள்ளார்கள். முன்னதாக இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ஆம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூர் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி பால்நாடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்ஆர்சி தொண்டரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய கான்வாயை பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில் சிங்கையா என்பவர் மலர்துவ சென்ற போது தவறி விழுந்து ஜெகன்மோகன் காரின் முன் பக்க சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார். இதனை அடுத்து அந்த ஆதரவாளரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. முதலில் ஜெகன் கான்வாயில் ஒரு வாகனத்தில் ஏறி விழுந்ததால் விபத்து நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஜெகன்மோகன் பயணித்த வாகனத்தின் அடியில் நசுங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…