4 unexpected hits from malayalam industry
40 வருடத்திற்கு முன்னர் அதிக அடல்ட் படங்களை வெளியிட்டது மலையாள சினிமா. அடல்ட் படங்கள் என்றால் மலையாள சினிமா என்ற அடையாளத்தை சமீப காலமாக அதன் இயக்குனர்கள் மாற்றி விட்டார்கள். ஒரு நல்ல குடும்ப படம் ஆகட்டும், ஆக்சன் படங்கள் ஆகட்டும், த்ரில்லர் ஆகட்டும், மலையாள சினிமா இது அனைத்திலும் ஜெயித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
Drishyam
குறிப்பாக இயக்குனர் ஜீத்து ஜோசப் இலாயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் ஆகி அங்கும் சூப்பர்ஹிட் கொடுத்தது. மக்களும் மலையாள சினிமாவை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர். புலிமுருகன், லூசிபர், ஜன கன மன என வருடத்திற்கு வருடம் மலையாள சினிமா ஒருபடி மேலே சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த வருடம், அதாவது 2024 ஆம் ஆண்டு வெறும் மூன்றே மாதங்கள் முடிந்துள்ள நிலையில் நான்கு படங்கள் மொத்த இந்திய சினிமா ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அப்படிப்பட்ட நான்கு படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
பிரேமலு
Premalu
புதுமுகங்களை வைத்து உருவான அழகான ஒரு காதல் கதை தான் பிரேமலு. யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அசுர வெற்றியை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாமல் உட்பட இதன் வசூல் மட்டும் 120 கோடியை தாண்டிவிட்டது. இதன் பட்ஜெட்டே வெறும் 10 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மயுகம்
Bramayugam
மலையாள மெகாஸ்டார் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் தான் பிரம்மயுகம். ஹாரர் ஜானரில் வெளியான இந்த படம், மிக அற்புதமாக உள்ளது. இதன் கதையும் சரி, படம் எடுத்த விதமும் சரி மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி வெளியான இந்த படம் ஒரே மாட்டாஹத்தில் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மஞ்சுமேல் பாய்ஸ்
Manjummel boys
எங்கு திரும்பினாலும் இப்போது மஞ்சுமேல் பாய்ஸ் தான். குணா படத்தின் குறிப்பு, கண்மணி அன்போடு காதலன் இவை எல்லாம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். குணா குகைக்குள் தவறி விழுபவரை காப்பாற்றும் இந்த கதை இறுதி நிமிடம் வரை நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்தது. இதுவரை வெளிவந்த மலையாள படங்களிலே இதுதான் அதிக வசூல் சாதனை செய்து சாதனை புரிந்தது. கிட்டத்தட்ட 212 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆடுஜீவிதம்
Aadujeevitham
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் இரு தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் ஆடுஜீவிதம். துபாயில் வேலை என செல்லும் இளைஞன், அங்கு ஆடு மேய்க்கும் கொத்தடிமையாக மாட்டிக்கொண்டு சித்திரவதை அனுபவிப்பதும், அவன் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறான் என்பதே ஆடுஜீவிதம் படத்தின் கதை. யாரும் எதிர்பார்க்காத தாக்கத்தை இது ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல இரண்டே நாளில் 16 கோடி வசூல் செய்துள்ளது.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…