Categories: சினிமா

என் அம்மா என்னை விட்டுட்டு போயிட்டாங்க…. கண்ணீர் மல்க பேசிய பேராண்மை பட நடிகை

Spread the love

காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் சரண்யா. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். துறுதுறுப்பான பேச்சும், அற்புதமான நடிப்பும் கொண்ட சரண்யா அதன்பின் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. தைராய்ட் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சரண்யா சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

Actress Saranya

இவர் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என பார்த்தால், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடன் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் இறந்தபின், சரண்யா கஷ்டப்பட்டு முன்னேறி இன்று டப்பிங் ஸ்டுடியோ வைத்துள்ளார். இப்போது மீண்டும் பிசியாக மாறியிருக்கும் சரண்யா அவர் வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, என் வாழ்ககை பல கஷ்டங்களை கொண்டது, போன வருடம் சாப்பாடுக்கு கூட கஷ்டப்பட்டு வந்தேன், ஆனால் இன்று மக்களுக்கு அன்னதானம் வழங்குகிறேன், சொந்தமாக டப்பிங் ஸ்டுடியோ வைத்துள்ளேன். ஆனால் இவை ஈசியாக அமைந்து விடவில்லை. பல வருட கஷ்ட வாழ்க்கைக்கு கிடைத்த பலன். சரண்யாவை ஒரு நடிகையாக மற்றவர்களுக்கு தெரியும், ஆனால் சரண்யாவை யாருக்கும் தெரியாது.

Actress saranya shares about her life

எனக்கென ஒரு குடும்பம் இல்லை, என் அப்பா இறந்துவிட்டார் என் அப்பா மறைவுக்கு பின் என் அம்மா அவங்களுக்கு என ஒரு வாழ்க்கையை அமைத்து கொண்டார். என்னை அவர் கவனிக்கவில்லை, என்னை அப்படியே விட்டு சென்று விட்டார். சொந்தக்காரர்கள் யாரும் என்மேல் ஒரு அக்கறை காட்டியது கூட இல்லை. என்னை யாரும் அவர்கள் வீட்டிற்கு அனுமதிக்க கூட மாட்டார்கள்.

அவ்வளவு கஷ்டப்பட்டேன், ஆனால் இன்று கடவுள் என்னுடன் இருக்கிறார். நான் முருகனின் பக்தை, என் வாழ்க்கை இன்று நலமாக இருக்கிறது, நான் சந்தோசமாக இருக்கிறேன். கடவுள் எனக்கு அணைத்து செல்வங்களையும் தந்துள்ளார். நான் கஷ்டப்பட்ட போது என்னை அரவணைத்து இறைவன் மட்டுமே என கண்ணீர் மல்க பேசியுள்ளார் சரண்யா.

Deepika

Recent Posts

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

2 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

14 minutes ago

வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…

21 minutes ago

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

26 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

31 minutes ago