“என் தம்பியை தொடாதே…!” – நள்ளிரவில் சிறுத்தையுடன் நேருக்கு நேர் மோதிய 20 வயது பெண்… நெட்டிசென்களை அதிரவைக்கும் சம்பவம்…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவை ஒட்டியுள்ள தோத்ரா கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கோடை வெப்பம் மற்றும் மின்வெட்டு காரணமாக பத்ரிலால் குஜார் என்பவரது குடும்பத்தினர் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், காட்டில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று மாடிக்கு வந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுவனான ராஜ் குஜாரின் தலையை கவ்விப் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றது.

தம்பியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டிருந்த அவனது 20 வயது அக்கா ராதா குஜார் திடுக்கிட்டு எழுந்தார். கண் முன்னே தம்பியை சிறுத்தை இழுத்துச் செல்வதைக் கண்டும் அவர் பயந்து ஓடாமல், தைரியமாக ஓடிச்சென்று தம்பியின் கால்களைப் பற்றிக் கொண்டு தன் பக்கமாக இழுத்தார். சிறுத்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே ஒரு கடுமையான இழுபறிப் போராட்டம் நடந்தது. சத்தம் கேட்டு குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து கூச்சலிட்டதை அடுத்து, சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு காட்டுக்குள் தப்பியோடியது.

இந்தத் தாக்குதலில் சிறுவனின் தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுத்தையின் பிடியில் இருந்து தம்பியை மீட்ட அக்காவின் வீரத்தைப் பாராட்டி வரும் அதே வேளையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் மற்றும் கால்நடைகள் வேட்டையாடப்படுவது தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதால், வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் கடும் அதிருப்தியும் அச்சமும் தெரிவித்துள்ளனர்.

Swetha

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

8 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

9 மணத்தியாலங்கள் ago