ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவை ஒட்டியுள்ள தோத்ரா கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கோடை வெப்பம் மற்றும் மின்வெட்டு காரணமாக பத்ரிலால் குஜார் என்பவரது குடும்பத்தினர் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், காட்டில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று மாடிக்கு வந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுவனான ராஜ் குஜாரின் தலையை கவ்விப் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றது.
தம்பியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டிருந்த அவனது 20 வயது அக்கா ராதா குஜார் திடுக்கிட்டு எழுந்தார். கண் முன்னே தம்பியை சிறுத்தை இழுத்துச் செல்வதைக் கண்டும் அவர் பயந்து ஓடாமல், தைரியமாக ஓடிச்சென்று தம்பியின் கால்களைப் பற்றிக் கொண்டு தன் பக்கமாக இழுத்தார். சிறுத்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே ஒரு கடுமையான இழுபறிப் போராட்டம் நடந்தது. சத்தம் கேட்டு குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து கூச்சலிட்டதை அடுத்து, சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு காட்டுக்குள் தப்பியோடியது.
இந்தத் தாக்குதலில் சிறுவனின் தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுத்தையின் பிடியில் இருந்து தம்பியை மீட்ட அக்காவின் வீரத்தைப் பாராட்டி வரும் அதே வேளையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் மற்றும் கால்நடைகள் வேட்டையாடப்படுவது தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதால், வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் கடும் அதிருப்தியும் அச்சமும் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன் என்பது வெறும் தோற்றம் சார்ந்த விஷயம் அல்ல; அது நீரிழிவு, இதய நோய் போன்றவற்றுடன் சில வகையான…
வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அங்கிருந்து கிடைத்துள்ள ஒரு…
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் ஆன்மிகத் தலங்களில் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில்…
கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் சட்டமன்ற…
அகமதாபாத்தின் வத்வா பகுதியில், அண்டை வீட்டாரை நம்பித் தன் குழந்தையை அனுப்பிய தாய்க்குப் பேரிடியாக ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியில், இன்று காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது…