மத்தியப் பிரதேச மாநிலம் பார்வானி மாவட்டத்தில், 7 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூர சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இரவு, தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை அச்சிறுவன் கடத்திச் சென்று, இந்திரா சாகர் கால்வாய் பகுதியில் வைத்து இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளான். அப்போது சிறுமி வலியால் அலறியதால் பயந்துபோன அந்தச் சிறுவன், அவளை அங்கிருந்த கால்வாயில் வீசிக் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
காணாமல் போன சிறுமியைத் தேடி வந்த போலீசார், கால்வாயிலிருந்து அவளது சடலத்தை மீட்டனர். பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. சிறுமியின் உறவினரான அந்த 17 வயது சிறுவன் ராஜ்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…