சண்டிகர் – அம்பாலா தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே விஐபி சாலையில் மெட்ரோ மால் பக்கத்தில் ஜூலை 23ஆம் தேதி அன்று 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்டு பிறகு கடத்தப்பட்ட இடத்திற்கு அருகே விட்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இரவு 8 மணி அளவில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கூற்றுப்படி, சலூனில் வேலையை முடித்துவிட்டு ஆட்டோ ரிக்ஷாவிற்காக காத்திருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் பயணத்தின் பொழுதே காரில் வைத்து அவரை அடித்து ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பிறகு பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அந்த பெண்ணை அதே இடத்திலேயே மீண்டும் வீசி சென்றுள்ளார்கள். இதனைடுத்து பாதிக்கப்பட்டவரின் தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் வழக்கம் போல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,…
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நிகில் மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம்…
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 74 தொகுதிகளில் வெற்றி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அருண், தனது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக்…
தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…
உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…