தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதால் ஸ்டாலினுக்கு அது பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் வெளிப்படையாகவே கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதும் இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட இருப்பதாகவும் சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் போட்டியிட 125 சட்டசபை தொகுதிகளை அடையாளம் காண கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட 125 தொகுதிகளை அடையாளம் காண காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
அவை எந்தெந்த தொகுதிகள், அதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது, கூட்டணியில் கேட்கும் தொகுதிகள் கிடைக்காமல் வேறு தொகுதிகள் வழங்கப்பட்டால் அங்கெல்லாம் எப்படி பணியாற்றுவது என்பது குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதே சமயம் 125 சட்டசபை தொகுதிகள் மட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் புதுவிதமான திட்டம் தீட்டி வருவதாகவும் தெரிகிறது.
தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…