Connect with us

VIDEOS

உண்மையாவே நீங்க இரும்பு மனுஷன் தான் சார்…. அம்மாடியோ 2 பைக்க எப்படி தூக்கிட்டு போறாரு பாருங்க…. வைரல் வீடியோ…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு பைக்குகளை கட்டிக்கொண்டு அதனை சோல்டரில் தூக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் தங்களுடைய நேரங்களை பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

   

ஒரு சிலர் பிரயோஜனமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று எண்ணி சில திறமையான விஷயங்களை செய்து வருகிறார்கள். அது போன்று ஒரு நபர் செய்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்தவர் கண்ணன். இரும்பு மனிதர் என்று பட்டம் பெற்ற இவர், ஏற்கனவே 80 டன் எடையுள்ள லாரியை கைற்றால் கட்டி இழுத்து உலக சாதனை படைத்தார்.

இது போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்த இவர் கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட உடல் பழுதுக்கும் சார்பில் கண்ணன் 270 கிலோ எடை உள்ள 2 மோட்டார் வாகனங்களை தனது தோளில் சுமந்தபடி 43 மீட்டர் தூரத்திற்கு நடந்து சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே நடந்த 30 மீட்டர் சாதனையை முறியடித்து 43 மீட்டர் தூரத்திற்கு நடந்து சாதனை படைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top