பெரும்பாலான கோவில் திருவிழாக்களில் தலையில் தேங்காயை உடைப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு வீட்டில் ஒருவரின் தலையில் தேங்காயை வைத்து அதை கட்டையால் அடிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
மக்கள் இந்த வீடியோக்களை பார்த்து மகிழ்கிறார்கள். சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுகிறார்கள். அதிலும் மூடநம்பிக்கை தொடர்பான வீடியோக்கள் அவ்வபோது வலம் வருகின்றது. நான் தான் சாமி, நான் சொல்வது நடக்கும் என்று கூறிக்கொண்டு போலி சாமியார்கள் வலம் வருவது வழக்கம்.
அந்த வகையில் இங்கு ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் தரையில் ஒருவர் அமர்ந்து கொண்டு தலையில் ஒரு தேங்காயையும் இரண்டு கைகளில் ஒவ்வொரு தேங்காயையும் வைத்துக் கொண்டுள்ளார். அவரின் பின்புறம் ஒரு சாமியார் கையில் கட்டையை வைத்துக்கொண்டு ஏதோ மந்திரம் சொல்லிக் கொண்டே அவரது தலையில் உள்ள தேங்காயை ஓங்கி அடிக்கின்றார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram