விஜய் டிவியில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த 5 வாரங்களாக நடந்து வருகிறது. இதில் பிரபல பின்னணி பாடகர் மகன், நடிகர் மற்றும் பாடகர் யுகேந்திரனும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். கடந்த வாரம் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த யுகேந்திரன், குறைந்த ஓட்டுகளை பெற்றதன் அடிப்படையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு, ரெட்கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் யுகேந்திரன் பேசி இருக்கிறார். அதில், பிக்பாஸ் வீடு குறித்த பல உண்மைகளை, வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் யுகேந்திரன்.
அந்த நேர்காணலில் யுகேந்திரன் கூறியதாவது, பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தால், அந்த வீடே சில விஷயங்களை செய்யும். உணர்வு ரீதியான சில பாதிப்புகளை அந்த வீடே ஏற்படுத்தும். கடுமையான மன உளைச்சலை தரும். இந்த வீட்டுக்குள் ஏன் வந்தோம், உடனே வீட்டை விட்டுச் சென்றுவிடலாம் என்றும் தோன்றும். பிக்பாஸ் வீட்டை பொருத்த வரை, கமல்ஹாசன் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். மாயா, பூர்ணிமா பேசுவதற்கு அதிக வாய்ப்பு அளிக்கிறார். அவரது நிகழ்ச்சியில் சிலருக்கு மட்டுமே பேச வாய்ப்பு கிடைக்கிறது.
பிரதீப்பை பொருத்த வரை, நல்ல ஹைப்பர் உள்ள பிராக்டிக்கலான மனிதர். அவரை வெளியேற்ற வேண்டும் என்று கமலே முடிவு செய்து விட்டார். அவராக அனுப்ப கூடாது என்பதற்காக உள்ளே சென்று பேசிவிட்டு வந்து, மற்றவர்களிடமும் கருத்து கேட்டார். அவ்வளவு பெரிய மனிதர் கேட்டால் யாரும் மறுக்க போவது இல்லை. பிக்பாஸ் மேடையை, தனக்கான அரசியல் மேடையாக கமல் பயன்படுத்தி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு பிரதீப்பை வௌியேற்றியதில் கூட கமல் அரசியல் செய்துவிட்டார். ஆண்களே அருவறுக்கும் அளவுக்கு கெட்ட வார்த்தைகள் பேசும் பெண்கள் உள்ளே இருக்கின்றனர். பிரதீப் விஷயத்தை, கமல் நினைத்திருந்தால் வேறு மாதிரி கையாண்டிருக்க முடியும். கமல் அதை செய்யவில்லை. அவரை எச்சரித்து மீண்டும் வீட்டில் இருக்க வைத்திருக்கலாம், ஆனால் அரசியல் செய்து அவரை கமலே வெளியேற்றி விட்டார் என்று கூறி இருக்கிறார் யுகேந்திரன்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…