விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது உள்ளனர். இந்த 18 போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இவர்களில் கடந்த சனிக்கிழமை போட்டியாளர் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி ரெட் கார்டு கொடுத்து கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார். இதற்கு தற்பொழுது வரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டு காதல் ஜோடிகள் வலம் வந்து கொண்டுள்ளனர். மணி-ரவீனா இவர்களிருவரை பற்றியும் நமக்கு தெரியும்.
அடுத்த காதல் ஜோடி ஐஷு -நிக்சன். இவர்கள் அவ்வப்பொழுது எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட குறுக்கே கண்ணாடி இருக்க இருவரும் மாறி மாறி முத்தம் குடுத்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலானது. இப்படி பெணகளிடத்தில் பலான சேட்டைகள் செய்து வரும் நிக்சனின் முகத்திரையை அனைவர் முன்னிலையில் வைத்து கிழித்து தொங்க விட்டுள்ளார் பிக் பாஸ்.
அதன்படி இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது . அந்த ப்ரோமோவில், அனைவரும் லிவிங் ஏரியாவில் இருக்கும் போது டிவியில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய வார்த்தைகள் போடப்பட்டு, இதனை யார் சொன்னார்களோ, அவர்களே வந்து அதற்கான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
அதன்படி எல்லோரும் தாங்கள் யாரைப் பற்றி பேசினார்களோ அதுக்குரிய விளக்கத்தைக் கொடுக்கின்றனர். அப்போது நிக்சன், வினுசா பற்றி அதாவது அவருடைய உடல் பற்றி (body shaming )பேசியதைப் போட்டு அதற்குரிய விளக்கத்தைக் கொடுக்க சொல்கின்றனர். அதற்கு நிக்சன் நான் அவரைப் பற்றி எந்தத் தவறாகவும் சொல்ல என்று சொல்ல, விசித்திரா ‘வினுஷாவுக்காக நாங்க கேட்போம்’ எனக் கூற இந்தப் ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…