“சொந்தக் காசுல சூனியம் வச்சிட்டியேம்மா” நகைகளைக் காட்டி வீடியோ போட்ட யூடியூபர்.. நள்ளிரவில் வீட்டுக்கே வந்த திருடர்கள்… மொத்தமும் போச்சு…!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபரான ரச்னா குர்ஜார் (Rachna Gurjar), அண்மையில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனக்குச் சொந்தமான தங்க, வெள்ளி நகைகள் மற்றும் சொகுசு வாழ்க்கை முறையைக் காட்டி வீடியோக்களைப் பகிர்ந்திருந்தார். அவர் வீடியோக்களை வெளியிட்ட சில நாட்களிலேயே, நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பெரிய அளவில் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஆடம்பரப் பதிவுகளே இந்தத் திருட்டுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. திருடர்கள் வீட்டின் எல்லை வேலியில் இருந்த முள் கம்பிகளை கட் செய்கரால் துண்டித்துவிட்டு, ஏணியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்துள்ளனர். மேலும், தங்களின் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் சிசிடிவி கேமராக்களை நீண்ட தடியைப் பயன்படுத்தி மேல்நோக்கித் திருப்பி வைத்துள்ளனர். பின்னர், ரச்னாவும் அவரது கணவரும் தூங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு, அலமாரிகளை உடைத்துக் கொள்ளையடித்துள்ளனர்.

இந்தத் துணிகரத் திருட்டில் ₹1.91 லட்சம் ரொக்கப் பணம், தங்க மங்களசூத்திரம், நான்கு தங்க மோதிரங்கள் மற்றும் பாரம்பரிய வெள்ளி நகைகள் என சுமார் 7 முதல் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன. நகைகள் மற்றும் பணத்துடன் சேர்த்து, வீட்டில் வைக்கப்பட்டிருந்த எனர்ஜி டிரிங்க்ஸ் (Energy drinks) அடங்கிய பெட்டியையும் திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அதிகாலையில் ரச்னா எழுந்து பார்த்தபோது அறை வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

28 minutes ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

36 minutes ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

41 minutes ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

43 minutes ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

55 minutes ago