திருமண வயதை எட்டிய இருவர் தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமல்ல எனவும், ஒரு உறவு திருமணத்தில் முடியவில்லை என்பதற்காக மட்டுமே ஒருவர் மற்றவரை ஏமாற்றிவிட்டார் என்று அர்த்தமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் ஏற்படும் இத்தகைய திருமணத்திற்கு முந்தைய உறவுகள், சம்பந்தப்பட்ட நபர்களின் நன்னடத்தையையோ அல்லது ஒழுக்கத்தையோ தீர்மானிக்கும் காரணியாக அமையக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கஜுலா திருபதி என்பவர் தற்காலிக காவலர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் திருமண வாக்குறுதி அளித்து பாலியல் உறவில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்ததாக கடந்த 2014-ஆம் ஆண்டில் அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருபதி தனது விண்ணப்பப் படிவத்திலேயே இந்த வழக்கைக் குறிப்பிட்டிருந்த போதிலும், காவலர் தேர்வு வாரியம் அவரது தேர்வைக் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே, இருதரப்பினரும் பேசி அந்தப் பிரச்சனைக்குச் சுமூகமாகத் தீர்வு கண்டனர்.
இதனை எதிர்த்து திருபதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, வாரியத்தின் ரத்து உத்தரவை நீக்கி அவருக்குப் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டார். ஆனால், இதனை எதிர்த்து தேர்வு வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தபோது, “குற்றத்தைச் சமரசம் செய்து கொள்வது குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதாக ஆகாது; ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட படைக்கு (Force) ஒருவர் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க முதலாளியே சிறந்த நடுவர்” எனக் கூறி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட திருபதி, உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “பாதிக்கப்பட்ட பெண்ணே சமரசம் செய்து கொள்ளச் சம்மதித்த நிலையில், இடையில் இருப்பவர்கள் மேல்முறையீட்டாளரின் குணநலன்கள் குறித்துத் தவறான முடிவுக்கு வர முடியாது” என்று குறிப்பிட்டனர். மேலும், திருமணத்திற்கு முந்தைய உறவுகள் இன்று சாதாரணமாகப் பார்க்கப்படுவதால் அதிகாரிகள் காலத்திற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவை முழுமையாக ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் தமிழக…
அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியில் அதிவேகமாக வந்த பல்சர் பைக் மோதியதில், பெண் ஒருவர் சுமார் 10 அடி தூரம் இழுத்துச்…