“சுயவிருப்பத்தோடு உறவு கொள்வது குற்றமல்ல!”.. உச்ச நீதிமன்றம் கொடுத்த வரலாற்றுத் தீர்ப்பு.. அலறும் பழைய சட்டங்கள்..!!!

Spread the love

திருமண வயதை எட்டிய இருவர் தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமல்ல எனவும், ஒரு உறவு திருமணத்தில் முடியவில்லை என்பதற்காக மட்டுமே ஒருவர் மற்றவரை ஏமாற்றிவிட்டார் என்று அர்த்தமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் ஏற்படும் இத்தகைய திருமணத்திற்கு முந்தைய உறவுகள், சம்பந்தப்பட்ட நபர்களின் நன்னடத்தையையோ அல்லது ஒழுக்கத்தையோ தீர்மானிக்கும் காரணியாக அமையக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கஜுலா திருபதி என்பவர் தற்காலிக காவலர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் திருமண வாக்குறுதி அளித்து பாலியல் உறவில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்ததாக கடந்த 2014-ஆம் ஆண்டில் அவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருபதி தனது விண்ணப்பப் படிவத்திலேயே இந்த வழக்கைக் குறிப்பிட்டிருந்த போதிலும், காவலர் தேர்வு வாரியம் அவரது தேர்வைக் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே, இருதரப்பினரும் பேசி அந்தப் பிரச்சனைக்குச் சுமூகமாகத் தீர்வு கண்டனர்.

இதனை எதிர்த்து திருபதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, வாரியத்தின் ரத்து உத்தரவை நீக்கி அவருக்குப் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டார். ஆனால், இதனை எதிர்த்து தேர்வு வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தபோது, “குற்றத்தைச் சமரசம் செய்து கொள்வது குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதாக ஆகாது; ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட படைக்கு (Force) ஒருவர் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க முதலாளியே சிறந்த நடுவர்” எனக் கூறி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட திருபதி, உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “பாதிக்கப்பட்ட பெண்ணே சமரசம் செய்து கொள்ளச் சம்மதித்த நிலையில், இடையில் இருப்பவர்கள் மேல்முறையீட்டாளரின் குணநலன்கள் குறித்துத் தவறான முடிவுக்கு வர முடியாது” என்று குறிப்பிட்டனர். மேலும், திருமணத்திற்கு முந்தைய உறவுகள் இன்று சாதாரணமாகப் பார்க்கப்படுவதால் அதிகாரிகள் காலத்திற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவை முழுமையாக ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

Muthu Mani

Recent Posts

“‘என் மகனை காதலித்தால் இதை பண்ணு…” சிறுமியை மிரட்டிய மாணவனின் தாய்…. அடுத்து நடந்த விபரீதம்… சிக்கிய ஆடியோ ஆதாரம்…. பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…

4 minutes ago

பகீர் கிளப்பும் மரணம்… 7- ஆம் வகுப்பு மாணவனுக்கு என்ன ஆச்சு?… ஏகலவ்யா மாதிரிப் பள்ளியில் தொடரும் சோகம்… கதறித் துடிக்கும் பெற்றோர்… பின்னணி என்ன?…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…

18 minutes ago

“கட்சி இணைப்புக்கு நோ… கூட்டணிக்கு ஓகே…” மீண்டும் எழும் ‘பவர் சென்டர்’ பிரச்சனை…. டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் யோசனை…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

19 minutes ago

திக் திக்… துரோகத்தை தட்டிக்கேட்ட சட்டக்கல்லூரி மாணவி… நடுரோட்டில் அரங்கேறிய வெறிச்செயல்.. பெங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…

28 minutes ago

“ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்…” ரூ.1,200 கோடி மக்கள் பணம் வீண்… புதிய தலைமைச் செயலக திட்டத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு…!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் தமிழக…

33 minutes ago