இந்திய தேசிய கொடியை காலால் மிதித்து உதைத்த இளைஞர்கள்… நாட்டையே கொந்தளிக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!

By Divyamayakannan on ஆவணி 19, 2025

Spread the love

சுதந்திர தினத்தன்று அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள காண்கர் காவ்ன் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தேசியக்கொடியை கையில் பிடித்து சிரித்தபடி காற்றில் வீசினர் . பின்பு அதில் ஒருவர் தேசிய கொடியை நேரடியாக உதைத்து தரையில் வீசும் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

வீடியோ வைரலான சில மணி நேரங்களிலேயே அசாம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூன்று இளைஞர்களையும் அருகில் இருந்த விடுதியில் வைத்து கைது செய்தனர்.  இருப்பினும் இதுவரை அந்த இளைஞர்கள் யார் என்று போலீசார் தரப்பில் வெளியிடப்படவில்லை. சுதந்திர தினத்தன்று நடந்த இச்சம்பவம் நம் நாட்டையே அவமதிப்பதாக தோன்றுகிறது.

   

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பல விமர்சனங்களை பெற்று வருகிறது. இவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் . நம் நாட்டின் அடையாளமான தேசிய கொடியை உதைத்து அவமதித்ததற்காக தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று வலைத்தளத்தில் கோரிக்கை விடுகின்றனர்.