தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்து, வருகின்ற 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால், கடந்த சில வாரங்களாகத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் சற்று இளைப்பாறுவதற்காக மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், சுற்றுலாத் தலங்களிலும் இந்தத் தேர்தல் காய்ச்சல் தொற்றிக் கொண்டுள்ளது.
கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தலமான குணா குகைப் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் திடீரென ஒன்று கூடி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) ஆதரவாக விண்ணதிர முழக்கமிட்டனர். “டி.வி.கே… டி.வி.கே…” எனச் சத்தமாக முழக்கமிட்டும், விசிலடித்தும், அக்கட்சியின் கொடியை அசைத்தும் அவர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த பிற கட்சியினரும் சுற்றுலாப் பயணிகளும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்.
தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், தேர்தல் முடிவுகளைப் பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும், முதல்முறையாகக் களம் கண்டுள்ள த.வெ.க எத்தனை இடங்களைக் கைப்பற்றும் என்பதைத் தெரிந்து கொள்ளப் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…
பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…
கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் 'War Powers'…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது.…