கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, பள்ளிப் பேருந்து ஓட்டுநரை இரு இளைஞர்கள் பொதுவெளியில் மிரட்டி, தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிப் பேருந்தை ஓட்டி வந்த தர்மன் என்பவர், உப்பு மாரியம்மன் கோயில் அருகே வரும்போது எச்சரிக்கைக்காக ஹாரன் அடித்துள்ளார். அப்போது சாலையோரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், ஹாரன் சத்தம் தனது பேச்சிற்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, தனது நண்பருடன் சேர்ந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முதியவர் என்றும் பாராமல் ஓட்டுநரையும், கிளீனரையும் தகாத வார்த்தைகளால் திட்டிய அந்த இளைஞர்கள், கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த அட்டூழியத்தைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாகத் தலையிட்டு இளைஞர்களைத் தடுத்து ஓட்டுநரை மீட்டனர். இது தொடர்பாக ஓட்டுநர் தர்மன் அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை காவல்துறையினர் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு தலைமறைவாக உள்ள அந்த இரு இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் பயணிக்கும் பேருந்தின் ஓட்டுநருக்கே இத்தகைய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த இளைஞர்களுக்குக் காவல்துறை தகுந்த ‘ட்ரீட்மென்ட்’ அளிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…