விழுப்புரம் தெற்கு நகரக் கழகச் செயலாளர் ஆர்.பசுபதி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது சொந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கட்சிப் பொறுப்புகளை வழங்கி வருவதாக பசுபதி நேற்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் கண்ணியத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையிலும், கொள்கைகளுக்கு முரணாகவும் செயல்பட்ட காரணத்தால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகத் தலைமை அறிவித்துள்ளது. மாவட்ட அரசியலில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது ஒரு முக்கிய நிர்வாகியின் நீக்கத்தில் முடிவடைந்திருப்பது விழுப்புரம் மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…