உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நந்த கிராமம் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் தனது 4 வயது முதல் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியின் மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று விட்டார். சம்பவம் நடந்த அன்று 4 வயது சிறுமி வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வாலிபர் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமையை அழைத்து சென்றார்.
இதற்கிடையே வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தொழிலாளி மகள் குறித்து விசாரித்த போது அங்கிருந்து சிறுவர்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் சிறுமியை கடைக்கு அழைத்து சென்றதாக கூறியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு சுமார் 500 மீட்டர் தூரத்தில் ஒதுக்குபுறமான இடத்தில் படுகாயங்களுடன் சிறுமி மயங்கி கிடந்ததை கண்டு தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது மகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதியானது. பிறப்புறுப்பை சுற்றி ரத்த காயங்களும், சிறுமியின் தலையில் கல்லால் தாக்கியதற்கான காயமும் இருந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
