கர்நாடக மாநிலம் சிக்க மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பாவித் என்பவர் ஆசிரியை காதலித்து வந்துள்ளார். அடிக்கடி பாவித் இளம்பெண்ணை சந்தித்து காதலுக்குமாறு தொந்தரவு அளித்துள்ளார். அதற்கு இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தார்.
நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பாவித் இளம் பெண்ணை வழிமறித்து காதலை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் அவரை தாக்கி ஆடையை அவிழ்த்து மரத்தில் கட்டி வைத்தார். அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் பாவித் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் பொதுமக்கள் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாவித்தை கைது செய்தனர்.
