சென்னை ஆவடி அடுத்த கண்ணம்பாளையம் பாரதிநகரில் வசித்து வருபவர் சங்கர். தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். மூத்த மகள் சர்மிளா(19). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று ஷர்மிளா தூங்கி எழுந்த போது திடீரென்று உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சொரிந்து கொண்டே இருந்துள்ளார். சில நிமிடங்களில் அரிப்பு ஏற்பட்ட இடமெல்லாம் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வீட்டில் இருந்த மஞ்சள் எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டு குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று அவருடைய வாயில் நுரை தள்ளி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை சங்கர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவருடைய உடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்த முதல் கட்ட விசாரணையில் ஷர்மிளாவின் தந்தை ஷங்கருக்கும் இதேபோன்று விஷப்பூச்சி கடித்து அரிப்பு ஏற்பட்டு உடலில் வீக்கம் ஏற்பட்டதும் இதே போல ஷர்மிளாவையும் விஷப்பூச்சி ஏதாவது கடித்து உகந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்கள் மேலும் இவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் உயிரிழப்புக்கான காரணம் என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளார்கள்
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…