உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ரஹன்கலான் கிராமத்தில், நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த ஜோடி ஒரே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த இந்திராவதி என்ற இந்து (20) மற்றும் பிரீதம் (22) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வாலிபர் பிரீதமிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், இவர்களது காதலுக்குப் பல்வேறு எதிர்ப்புகள் இருந்துவந்துள்ளன.
இந்நிலையில், நேற்றிரவு காதலியின் வீட்டில் உள்ள ஒரு அறையில், இருவரும் ஒரே துப்பட்டாவால் தூக்குப் போட்டுக்கொண்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் குடும்பத்தினர் இது தற்கொலை அல்ல, கொலை எனச் சந்தேகமும் குற்றச்சாட்டும் எழுப்பியுள்ளதால், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன…
தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்து மக்கள் பிரதிநிதியாக மாறியுள்ள விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தினர் அடுத்த இந்தியப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருவதாக வெளியான புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதிநிலை…
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி டெல்லி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா கேன்ட் நிலையத்தில் வைத்துப் பொதுப்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.…
பரேலியைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருக்கு அம்ரிதா கவுர் (24) என்ற பெண் தவறான அழைப்பு மூலம் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில்…