சென்னை திமுகவில் மெகா ஆபரேஷன்…. 6 மாவட்டங்கள் 10-ஆக மாற்றம்…. முன்னணி அமைச்சர்களுக்கு அதிர்ச்சி?…. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…!

Spread the love

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தனது உட்கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் தீவிரப் பணியில் இறங்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை அதிகப்படுத்தவும், நிர்வாகத்தை எளிமைப்படுத்தவும் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்டச் செயலாளர்களுக்கு வயது வரம்பு, அதிகபட்சம் 2 முறை மட்டுமே பதவி வகிக்கும் வாய்ப்பு, ஒரு மாவட்டச் செயலாளருக்கு அதிகபட்சமாக 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு போன்ற புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் இருந்த 77 அமைப்பு ரீதியான திமுக மாவட்டங்கள் தற்போது 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, தலைநகர் சென்னையில் இதுவரை 6 அமைப்பு ரீதியான மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை வடக்கு (ஆர்.டி. சேகர்), சென்னை வடகிழக்கு (மாதவரம் எஸ். சுதர்சனம்), சென்னை கிழக்கு (பி.கே. சேகர்பாபு), சென்னை மேற்கு (சிற்றரசு), சென்னை தென்மேற்கு (மயிலை த. வேலு) மற்றும் சென்னை தெற்கு (மா. சுப்பிரமணியன்) ஆகிய 6 மாவட்டச் செயலாளர்களின் கீழ் தொகுதிகள் செயல்பட்டு வந்தன. தற்போது இவர்களிடம் இருந்த சில தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு, சென்னை வடமேற்கு, சென்னை மத்தி, சென்னை மத்திய கிழக்கு மற்றும் சென்னை மத்திய மேற்கு ஆகிய 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த மறுசீரமைப்பைத் தொடர்ந்து, சென்னையில் புதிய மாவட்டச் செயலாளர்களாகப் பொறுப்பேற்கவுள்ள நிர்வாகிகளின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாவட்டத்திற்குப் புழல் நாராயணன், கே.பி.பி. சங்கர் அல்லது மாதவரம் சுதர்சனம் பெயர்களும், வடக்கு மாவட்டத்திற்குப் பரம்பூர்/கொளத்தூர் தொகுதிகளை உள்ளடக்கி கிரிராஜன் அல்லது ஆர்.டி. சேகர் பெயர்களும் பரிசீலிக்கப்படுகின்றன. அதேபோல், வடமேற்கு மாவட்டத்திற்குச் சுபேர் கான் அல்லது இளையா அருணா, மத்தி மாவட்டத்திற்குப் பரந்தாமன் அல்லது கார்த்திக், மத்திய கிழக்கு மாவட்டத்திற்குச் சிற்றரசு, மற்றும் மத்திய மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அதேவேளையில், சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தென்மேற்கு மாவட்டத்திற்கு கே.கே. நகர் தனசேகர் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா, தென்கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தெற்கு மாவட்டத்திற்கு அரவிந்த் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் உத்தேசப் பட்டியலில் முன்னணியில் உள்ளன. இருப்பினும், இது முற்றிலும் ஒரு உத்தேசப் பட்டியல் மட்டுமே என்றும், திமுகவின் உட்கட்சித் தேர்தல் நிறைவடைந்த பிறகே புதிய மாவட்டச் செயலாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தலைமை மூலம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

பாஜக-வுக்கு அடித்த லாட்டரி…. விஜய் எடுத்த அந்த ஒரு முடிவால் மொத்தமாக மாறப்போகும் தேர்தல் களம்… அமித்ஷா போடும் மாஸ்டர் பிளான்….!

தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்து மக்கள் பிரதிநிதியாக மாறியுள்ள விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தினர் அடுத்த இந்தியப்…

5 minutes ago

“தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரத்தில் ரெட் அலெர்ட்”…. TRB ராஜா வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்…. அதிர்ச்சி தரும் GST புள்ளிவிவரம்…!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருவதாக வெளியான புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதிநிலை…

12 minutes ago

எக்ஸ்பிரஸில் சிக்கிய சிவப்பு சூட்கேஸ்… வசமாக சிக்கிய தம்பதி…. சென்னை பெண் கொடூரக் கொலை வழக்கின் திடுக்கிடும் பின்னணி…!!

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி டெல்லி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா கேன்ட் நிலையத்தில் வைத்துப் பொதுப்…

14 minutes ago

“என் தலையிலேயே கை வைக்க பாக்கிறாரா?”…. தினகரன் மீது பாயும் இபிஎஸ்…. அதிமுகவில் வெடித்த அடுத்த பூகம்பம்….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.…

16 minutes ago

“வீடியோ காலில் ஆடையில்லாமல் வாங்க…” காதல் ஆசை வலையில் விழுந்த வாலிபர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்… போலீஸ் .அதிரடி..!!

பரேலியைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருக்கு அம்ரிதா கவுர் (24) என்ற பெண் தவறான அழைப்பு மூலம் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில்…

22 minutes ago