மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் தலசரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் நேற்று முன் தினம் இரவு தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அவர்களை மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டதுடன், அவர்களிடம் இருந்த ரொக்கம் மற்றும் செல்போன்களையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தலசரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் சமிக்ஞைகளை ஆய்வு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த சிலரை அடையாளம் கண்டு உடனடியாகக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய முதன்மை நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள எஞ்சிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…