ஐயோ எங்களை விட்டுடுங்க ப்ளீஸ்… நண்பர் கண்முன்னே இளம்பெண் கடத்தல்… நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்… கொந்தளிக்கும் பொதுமக்கள்…!

By Swetha on ஆவணி 12, 2026

Spread the love

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் தலசரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் நேற்று முன் தினம் இரவு தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அவர்களை மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டதுடன், அவர்களிடம் இருந்த ரொக்கம் மற்றும் செல்போன்களையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தலசரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் சமிக்ஞைகளை ஆய்வு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த சிலரை அடையாளம் கண்டு உடனடியாகக் கைது செய்தனர்.

   

இந்த வழக்கில் தொடர்புடைய முதன்மை நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள எஞ்சிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.