“புண்ணியம் தேடப் போய் போர்க்களமானது…” எண்ணெய் மசாஜ் செய்த வாலிபருக்கு அடி உதை… கான்வர் யாத்திரையில் அதிரடித் திருப்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 2, 2026

Spread the love

கான்வர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு உதவி செய்து புண்ணியம் தேட விரும்பிய இளைஞர் ஒருவர், அவ்வழியாக வந்த காவடி யாத்திரீகர்களின் உடலுக்கு எண்ணெய் மசாஜ் செய்யத் தொடங்கினார். அதில் ஒரு பக்தருக்கு அந்த இளைஞர் மசாஜ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் பக்தரின் உடல்நிலை திடீரென மோசமடையத் தொடங்கியது.

இதனால் கடும் கோபமடைந்த மற்ற காவடி யாத்திரீகர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, உதவி செய்ய வந்த அந்த இளைஞரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கி நையப்புடைத்தனர். புண்ணியம் சம்பாதிக்க நினைத்து நற்செயலில் ஈடுபட்ட வாலிபர், பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகி அடிவாங்கிய இந்த விபரீதச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.