“எங்ககிட்டயே வம்பா?” – தோப்புக்கரணம் போடச் சொல்லி வற்புறுத்திய ரவுடி கும்பல்; இறுதியில் நேர்ந்த கொடூரம்…திருமயத்தில் ரத்த ஆறு ஓடிய பயங்கரம்…!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரவுடி கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி அருகே உள்ள ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த லோகநாதன் (23) என்பவர், தனது நண்பர்கள் ஆறு பேருடன் திருமயம் அருகே உள்ள மலைக்குடிபட்டி டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். பின்னர் மது அருந்துவதற்காக அருகில் உள்ள கண்மாய் பகுதிக்குச் சென்றபோது, திருமயம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர்.

மது போதையில் இருந்த சதீஷ்குமார் தரப்பினர், லோகநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் வீண் வம்பில் ஈடுபட்டுள்ளனர். ரவுடி கும்பல் அவர்களை வலுக்கட்டாயமாகத் தோப்புக்கரணம் போடச் சொல்லி வற்புறுத்தியதுடன், லோகநாதனின் செல்போனையும் பறித்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் லோகநாதனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் தலை மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த வெட்டு காயமடைந்த லோகநாதன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை அருகில் இருந்த கண்மாயில் வீசிவிட்டு, கொலையாளிகள் காரில் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமயம் போலீசார், லோகநாதனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பிடத்தக்க விஷயமாக, இந்த கொலை வழக்கில் தேடப்படும் சதீஷ்குமார், கடந்த ஆண்டு தனக்கு எதிராகப் புகார் அளித்த ஜகபர்அலி என்பவரை லாரியேற்றிக் கொலை செய்த குற்றவாளியான குவாரி உரிமையாளர் ராசு என்பவரின் மகன் ஆவார். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இந்த கும்பலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கோரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Nanthini

Recent Posts

அதிமுகவில் வெடித்த உட்கட்சிப் போர்… இபிஎஸ்-க்கு எதிராக சி.வி.சண்முகம் போர்க்கொடி…. அவசர மீட்டிங்… பரபரப்பு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், அதிமுகவிற்குள் மிகப்பெரிய உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக…

4 minutes ago

BREAKING: அதிமுக உடைகிறது?… ஒரே நாளில் தவெக-வுக்கு தாவும் 35 எம்.எல்.ஏ-க்கள்… உச்சக்கட்ட பரபரப்பு…!

அதிமுகவின் முக்கிய முகங்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது தலைமையில் சுமார் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்…

13 minutes ago

#FLASH NEWS: “ஜோசப் விஜய் எனும் நான்”… ஆளுநர் மாளிகை நோக்கி விஜய்! 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு… தமிழக அரசியலில் உச்சகட்டத் திருப்புமுனை…!

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 என்ற 'மேஜிக்' எண்ணைத் தமிழக வெற்றிக் கழகம்…

19 minutes ago

தமிழக அரசியலில் ‘கிளைமாக்ஸ்’… விஜய்க்கு ஆதரவாக திரும்பிய அதிமுகவின் 36 எம்எல்ஏக்கள்…. களத்தில் குதித்த சி.வி.சண்முகம் அணி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக…

24 minutes ago

இது மட்டும் நடக்கலனா செத்துடுவேன்… கழுத்தை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்… பரபரக்கும் தமிழக அரசியல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சிகரமான…

29 minutes ago

BIG BREAKING: விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு… திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு… 118 எம்.எல்.ஏ-க்கள் கன்பார்ம்..!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது…

29 minutes ago