தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 என்ற ‘மேஜிக்’ எண்ணைத் தமிழக வெற்றிக் கழகம் எட்டியுள்ளது. ஏற்கனவே தவெக வசம் 107 எம்.எல்.ஏ-க்கள் பலம் உள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் (5), சிபிஎம் (2), சிபிஐ (2) மற்றும் விசிக (2) ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளதால், அக்கட்சியின் தலைவர் விஜய் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தேவையான பலத்தைப் பெற்றுள்ளார்.
இந்த முக்கிய அரசியல் நகர்வைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர விஜய் திட்டமிட்டுள்ளார்; அவர் நாளைக்கே முதலமைச்சராகப் பதவியேற்பாரா அல்லது வேறு தேதியில் விழா நடைபெறுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…
தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…
நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…
அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை மர்ம…