அதிமுகவின் முக்கிய முகங்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது தலைமையில் சுமார் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுகவின் மொத்தமுள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 35 பேர் பிரிந்து சென்று மற்றொரு கட்சிக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்பதோடு, அவர்களே “உண்மையான அதிமுக” எனக் கருதப்படவும் சட்டரீதியாக வாய்ப்புள்ளது.
1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னரும், 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதிமுக சந்தித்த பிளவுகளைப் போலவே, தற்போதும் அக்கட்சி மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய உடைவைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது உண்மையாகும்பட்சத்தில் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றத்திற்கும், அதிமுகவின் எதிர்கால இருப்பு குறித்த கேள்விக்குறிக்கும் இது வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…
தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…
நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…
அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை மர்ம…