மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரான குணால் சந்த்குடே, காவ்தியா மலையில் இருந்து தவறி விழுந்து தனது பெற்றோருடன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டும் இதே மலையின் உச்சிக்குச் சென்று குணால் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு விரைந்த காவலர்கள் சுரேஷ் பிசே மற்றும் ஜெயேஷ் சலுங்கே ஆகியோர், குணாலை மிகுந்த பொறுமையுடன் பேசி அவரது தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டுள்ளனர்.
“அந்த இரண்டு காவலர்களும் அவனைச் சமாதானப்படுத்தி, அவனது குடும்பத்தினரிடம் பத்திரமாக சேர்த்தனர்” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முறை குடும்பப் பிரச்சினை மற்றும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக அதே இடத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில் குணாலும் அவரது பெற்றோரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…