விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் தனது விவசாய நிலத்தில் பன்றிகள் வராமல் தடுப்பதற்காக அனுமதி இல்லாமல் மின்வேலி அமைத்துள்ளார். சம்பவம் நடந்த போது அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வயல்வெளியை கடந்து சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று லட்சுமணனின் உடலை மீட்டு அரசு மருத்துவப்பணிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
