தெலுங்கானா மாநிலத்தில் கடவுளுக்கு கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிறிசில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் தீதி ரோஹித்(25). இவர் மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறவில்லை என்று அடிக்கடி குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்து வந்துள்ளார். இதனால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த ரோகித் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கடவுளுக்கு ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஒரு நல்ல தற்கொலை கடிதம் எழுத வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. வாழ்வது இறப்பதை விட வேதனையானது என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞரின் இந்த முடிவு பலரையும் அதிர வைத்துள்ளது.
