பெண்களுக்கு எதிரான அநாகரிகச் செயல்கள் பொதுப் போக்குவரத்தில் தொடர்கதையாகி வரும் நிலையில், பேருந்து பயணத்தின் போது ஒரு பெண் துணிச்சலாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் தனது நண்பர்களுடன் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு, நள்ளிரவு 12 மணி முதல் ஒரு நபரால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் அந்தப் பெண்ணுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர், நள்ளிரவு முதல் விசித்திரமான சத்தங்களை எழுப்பி அநாகரிகமாகப் பேசத் தொடங்கியுள்ளார். அந்தப் பெண் ஆரம்பத்தில் இதைப் பொருட்படுத்தாமல் அமைதியாக இருக்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த நபரோ எல்லை மீறி தனது மொபைல் திரையில் “You wanna enjoy with me?” (என்னுடன் என்ஜாய் செய்ய விருப்பமா?) என ஆபாசமாக எழுதி அந்தப் பெண்ணிடம் காண்பித்துள்ளார்.
இந்த அநாகரிகச் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக அந்த நபரைத் தட்டிக்கேட்டதோடு, அவரதுச் செயலை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இரவு முழுவதும் அதே பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய சூழலில், தான் மிகவும் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்ததாக அந்தப் பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யக் கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…