CINEMA
கோயில் கோயிலா போயி என்ன பிரயோஜனம்….. “சொந்த மேக்கப் மேனுக்கு துரோகம் செய்த யோகி பாபு”….!!!!
தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய காமெடி நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு தான். சினிமாவிற்கு வந்த சமயத்தில் பல கேலி கிண்டல்களை சந்தித்தாலும் அந்த கேலிகளையே தனது பிளஸ் ஆக மாற்றிக்கொண்டு தற்போது சாதித்திருக்கின்றார். சினிமாவிற்கு வந்த புதுதில் வாய்ப்பு குறைவாகத்தான் இருந்தது.
காலம் செல்ல செல்ல அவரது காமெடி திறமையால் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இதனால் தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் பாலிவுட் வரை காமெடி ஆக்டராக கலக்கி வருகிறார். தற்போது யோகிபாபு மீது ஒரு குற்றச்சாற்று எழுந்துள்ளது. அதாவது அவரின் மேக்கப் மேன் ஒருவருக்கு ஒருநாள் சம்பளம் 8000 ரூபாய் ஆகும்.
ஆனால் அதில் யோகி பாபு 5000-ம் ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டு அவருக்கு வெறும் 3000 ரூபாய் தான் சம்பளமாக கொடுத்துள்ளார். இதை கேள்விப்பட்ட மேக்கப் மேன் மனதளவில் நொந்து இவரா? இப்படி செய்தது என எண்ணி வேலையை விட்டு நின்று விட்டாராம். யோகி பாபு ஒரு படத்திற்கு 11 லட்சம் சம்பளம் வாங்கி வரும் நிலையில் ஒரு மேக்கப் நாளைக்கு இப்படி சம்பளத்தை பிடித்துக் கொண்டு கொடுப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவில் கோவிலாக சென்று புண்ணியம் தேடும் யோகி பாபு இப்படி ஒரு நபருக்கு துரோகம் செய்வது நியாயமா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். உடல் முழுவதும் சாமி கயிறை கற்றுக்கொண்டு ஒரு மேக்கப் மேனின் சம்பளத்தில் கை வைக்கிறார் என அவரை திட்டிட்டு எடுத்து வருகிறார்கள்.