Connect with us

பெண் நடன கலைஞர் சொன்ன அந்த வார்த்தையால் நடனமாடுவதையே விட்டொழித்த யோகி பாபு? அடடா, இவர் இப்படிப்பட்ட மனுஷனா?

CINEMA

பெண் நடன கலைஞர் சொன்ன அந்த வார்த்தையால் நடனமாடுவதையே விட்டொழித்த யோகி பாபு? அடடா, இவர் இப்படிப்பட்ட மனுஷனா?

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, தொடக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமாக ஆனார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய யோகி பாபு,“சென்னை எக்ஸ்பிரஸ்”, “வீரம்”, “மான் கராத்தே” போன்ற திரைப்படங்களின் மூலம் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டார்.

அதன் பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் காமெடியில் கலக்கிய யோகி பாபு, தற்போது பிசியான காமெடி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வருகிற 26 ஆம் தேதி வெளியாகவுள்ள “ரத்னம்” திரைப்படத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளார்.

   

இதனை தொடர்ந்து சமீபத்தில் இத்திரைப்படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய யோகி பாபு, “நான் ஏன் பாடல்களுக்கு ஆட மறுக்கிறேன் என்றால் ஒரு முறை ஒரு ஹீரோவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியபோது அடிக்கடி சொதப்பிக்கொண்டே இருந்தேன். அந்த நடனக் காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டன. அப்போது அங்கிருந்த ஒரு பெண் டான்சர், ‘மாரெல்லாம் வலிக்குது, இவனுங்க ஆடித் தொலைய மாட்டிக்கிறானுங்க’ என்று கூறினார். அதில் இருந்து நான் நடனமாடுவதை விட்டுவிட்டேன்” என்று மிகவும் வருத்ததுடன் பகிர்ந்துகொண்டார்.

 

“ரத்னம்” திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top