தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைக் குறைத்துக் கொண்டார் சீதா. ஆனால் பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அவரின் இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். இப்போது அவர் சிறுவர்களை வைத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கி அதை இந்தியன் 2 ரிலீஸ் ஆகும் நாளில் ரிலீஸ் செய்யவுள்ளார்.
பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து இயங்கி வருகிறார். இது சம்மந்தமாக சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் பேசும்போது “என்னை ஒருநாள் எழுத்தாளர் சுஜாதா அழைத்து ‘நீ நடிப்பதை மட்டும் நிறுத்தாதே..உன்னிடம் வித்தியாசமான ஒரு நடிகன் இருக்கிறான். நடிக்கிறான் என்று தெரியாமலே அவன் நடிக்கிறான்.” என சொன்னார்.
அதுதான் இப்போது வரை நடக்கிறது. இயக்குனர் பார்த்திபனுக்கு நடிகர் பார்த்திபன்தான் இப்போது வரை சோறு போட்டுகொண்டிருக்கிறான். நாலு படம் போய் நடிப்பேன். அதை வைத்து ஒரு படம் எடுப்பேன். இப்போது கூட சில படங்களில் நடிக்கிறேன். அதில் பணம் சேர்ந்ததும் மீண்டும் படம் எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…
பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…
சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…