இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளம் என்பது பொழுது போக்காக மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்கும் தளமாகவும் மாறி உள்ளது. பலரும் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக புதுவிதமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். தங்கள் வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூட வீடியோவாக இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.
இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலமாக பணம் சம்பாதிப்பவர்கள் மனிதர்கள் மட்டுமல்லாமல் சில விலங்குகளும் தற்போது அந்த வேலையை தொடங்கியுள்ளது. அதன்படி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 12 கோடி ரூபாய் சம்பாதித்து 84 மில்லியன் பவுண்டுகள் அதாவது 852 கோடி உடன் உலகின் பணக்கார மிருகமாக பூனை ஒன்று மாறி உள்ளது. இந்த பூனையின் பெயர் நளா. விலங்குகள் காப்பகத்தில் இருந்த இந்த பூனையை கடந்த 2012 ஆம் ஆண்டு பூக்கி என்ற நபர் ஒருவர் வாங்கி வளர்த்துள்ளார்.
அதன் பிறகு அவர் பூனை செய்யும் சேட்டைகள் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர ஆரம்பித்தார். இந்த பூனையின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 4.5 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இந்த பூனையின் கணக்கில் 7267 பதிவுகளும் உள்ளது. அந்த பூனையிடம் மொத்தமாக 84 மில்லியன் நிகர மதிப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது அதிகம் பின்தொடர்பவர்களை கொண்ட பூனைக்கான கின்னஸ் உலக சாதனையையும் பெற்றுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…