பஞ்சாபில் நடந்த ஒரு வித்தியாசமான சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் மாவட்டத்தை கோழி தொழிலாளியான ராம் சிங் மற்றும் அவருடைய மனைவி நசீப் கவுர் ஆகியோருக்கு லாட்டரி இன் ஜாக்பாட் பரிசு அளித்துள்ளது. இவர்கள் இருவரும் அன்றாட விவசாய வேலைகளை செய்து வருபவர்கள். வெறும் 200 ரூபாய் கொடுத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் அவர்களுக்கு பஞ்சாப் மாநில லாட்டரியில் முதல் பரிசான 1.50 கோடி விழுந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்களுக்கு லாட்டரி விழுந்ததை அறிந்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. காரணம் இந்த விஷயம் அக்கம் பக்கத்தில் காட்டுத்தைப் போல பரவியது. இவ்வளவு பெரிய தொகை கிடைத்த செய்தி ஊருக்கே தெரிந்ததால் கொள்ளையர்கள் அல்லது கிரிமின்களால் தங்களுக்கு ஆபத்து வரலாம், யாராவது கடத்திக் கொண்டு சென்று படம் கேட்டு மிரட்டலாம் என்று அவர்கள் பயந்துள்ளனர். திடீர் பணக்காரர்கள் ஆனதால் ஏற்பட்ட இந்த அச்சம்தான் அவர்களை தலைமறைவாக்கிவிட்டது.
பயந்து போன அவர்கள் குடும்பத்தோடு தங்கள் வீட்டை பூட்டிவிட்டு செல்போன்களை ஆப் செய்து விட்டு யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய இடத்திற்கு சென்று விட்டனர். இந்த விஷயம் காவல் நிலையம் வரை சென்ற நிலையில் உடனே அவர்கள் சுதாவரித்துக் கொண்டனர். காவல் கண்காணிப்பாளர் அந்த குடும்பத்தை தொடர்பு கொண்டு, நீங்கள் பயப்பட வேண்டாம், நாங்கள் உங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கிறோம், உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று நம்பிக்கை அளித்தனர். இருந்தாலும் லாட்டரியில் கிடைத்த பெரிய தொகையும் அதனால் ஏற்பட்ட கொள்ளை பயமும் அந்த குடும்பத்தின் நிம்மதியை மொத்தமாக காலி செய்து விட்டது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…