திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலம் ஊட்டியாணி காலனி தெருவில் ரமேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும், வினித் (24), விக்ரம் (22) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இப்படியான நிலையில் சம்பவத்தன்று இரவு மூத்த மகன் வினித் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது மது அருந்திவிட்டு வாசலில் அமர்ந்திருந்த ரமேஷுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வீட்டின் பின்புறம் காயவைத்த துணிகளை எடுப்பதற்காக செல்வி சென்று விட்டார். அப்போது வீட்டின் பின்பக்கமாக சென்ற ரமேஷ் தன்னுடைய மனைவியை படுக்கைக்கு வர அழைத்துள்ளார். அதற்கு மகன் சாப்பிடாமல் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான், அவனுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று செல்வி கூறியுள்ளார்.
ஆனாலும் ரமேஷ் தொடர்ந்து செல்வியை வற்புறுத்திய நிலையில் அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரமேஷ் செல்வியை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்ற நிலையில் செல்வி கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் செல்வி கழுத்தில் அணிந்து இருந்த தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…