தமிழகத்தில் 60 வயது வரையிலான அனைத்து மகளிர்களுக்கும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ மூலம் மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், இவ்வளவு பெரிய நிதியை ஒதுக்குவதில் ஏற்படும் கடுமையான நிதிச்சுமை காரணமாக, எதிர்காலத்தில் தகுதி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.
முன்னதாக, 2021 சட்டமன்றத் தேர்தலின் போது ‘அனைத்து பெண்களுக்கும்’ மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, பின்னர் நிதி மேலாண்மையைக் கருத்தில் கொண்டு குடும்ப வருமானம், அரசுப் பணி, கார்ப்பரேட் வரி செலுத்துதல் போன்ற பல்வேறு தகுதி வரம்புகளை நிர்ணயித்து தகுதியுள்ள பயனாளிகளுக்கு மட்டுமே அத்தொகையை வழங்கி வருகிறது; அதே போன்றதொரு பொருளாதார சவாலையும், நடைமுறைச் சிக்கலையும் தவெகவின் இந்த ரூ.2,500 வாக்குறுதியும் எதிர்கொள்ள நேரிடும் என்பதே அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…
தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…