விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியை சேர்ந்த ரமா என்ற பெண் ஒருவர் அமேசான் விற்பனை தளத்தில் 400 ரூபாய் மதிப்புள்ள ஒரு பிளாஸ்க் பாட்டிலை ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு ஓரிரு நாட்களில் அவருக்கு ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அப்போது ஆசை ஆசையாய் பிரித்துப் பார்த்து அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அங்கே பிளாஸ்க் வருவதற்கு பதிலாக ஒரு கருங்கல் இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்துடன் விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ரமா பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கடைகளுக்கு செல்ல சங்கடப்பட்டு கொண்டு ஆன்லைனில் நாம் ஆர்டர் செய்கிறோம். நிறைய பேருக்கு நல்ல முறையில் ஆர்டர் கிடைத்து நல்ல பொருளாக அமைந்து விடுகின்றது. என்னை போன்ற ஏமாளிகளுக்கு இப்படி கல்லை வைத்து அனுப்புகிறார்கள் என்று அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வர பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…