சொன்னா கேட்கமாட்டீயா..? பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது நபரை வீடுபுகுந்து தீர்த்துக்கட்டிய பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

By Soundarya on ஆனி 10, 2025

Spread the love

ஒடிசா மாநிலத்தில் 60 வயது நபர் ஒருவர் நீண்ட நாட்களாக பல பெண்களுக்கு பாலியல் தொழிலை கொடுத்து வந்தார். இதனால் 8 பெண்கள் உள்ளிட்ட பத்து பேர் ஒன்றாக சேர்ந்து அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பெண்கள் உட்பட மொத்தம் பத்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். அதாவது ஜூன் மூன்றாம் தேதியன்று இரவு பாதிக்கப்பட்ட பெண்களின் குழுவினர் பாலியல் தொல்லை கொடுத்த அந்த 60 வயது நபரை அவருடைய வீட்டிற்கு புகுந்து அவரை வெட்டி கொலை செய்து பிறகு உடலை எரித்துள்ளார்கள்.

அதாவது அந்த நபர் கடந்த நான்கு வருடங்களாக பல கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளா.ர் இது போன்ற அவருடைய இந்த மோசமான சம்பவத்திற்கு முடிவு கட்ட தான் இந்த கொடூர முடிவை எடுத்ததாக அந்த பெண்கள் கூறினார்கள். இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதற்கு முன்பாக அப்பெண்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் எவ்வித புகாரும் அளிக்கவில்லை.