தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் ஏற்படுத்தும் இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தொகை உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தார்கள்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என்று இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கடன் தொகை நிலுவை இல்லை என்பது உறுதி செய்த பிறகு மட்டும் தான் சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.
